பொய்ப் பிரசாரத்தைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் அ.தி.மு.க., இஸ்லாமிய மக்களுக்குச் செய்த சலுகைகளைப் பட்டியலிட்டுள்ளது.
சிறுபான்மை மக்களுக்கு உதவிட அ.தி.மு.க. துடிப்புடன் செயல்பட்டுவருவதாகவும் இஸ்லாமியர்களுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையிலான உறவைப் பிரிக்க சிலர் முயற்சிப்பதாகவும் கூறியுள்ளது.
என்ஆர்சி எனப்படுவது, அசாமிற்கான சட்டம் என்றும் மத்திய அரசுடன் இணக்கமாய் இருந்து தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அ.தி.மு.க. செயல்படுவதாகவும் அக்கட்சி விளக்கமளித்துள்ளது.